SHAKTHI......

SHAKTHI......
நினைவுகள்

Thursday, March 11, 2010

இந்த வாரப் புத்தகம்

ரொம்ப நாளாச்சுங்க ஒரு புத்தகத்தை படிக்க எடுத்து முடுசிட்டு தன கீழே வைக்கிறது.
ரொம்ப நாளா படிக்கணும்னு நினைச்சிட்டே இருந்தது. இப்ப தன கிடைச்சது நேரமும் புத்தகமும் ஒரு சேர.   கதையின் நாயகன் பல படங்கள்ல வர மாதிரி நகரத்தில் இருந்து சின்ன கிராமத்திற்கு போறார். அதுக்கப்புறம் முழுக்கதையும் அந்த கிராமத்துள் தான்.
படிக்கும் பொது உங்களையும் கிராமத்திற்கு அழைத்துச்செல்லும் உணர்வு ஏற்பட்டால் அது கதாசிரியிரின் வெற்றி.  கொலையைக்கூட அழகாக சொல்லும் திறமை சுஜாதாவுக்கு மட்டும் தான். முற்பாதி முழுவதும் நிதானமாய் ரசிக்கலாம் கிராமத்தை (வாழலாம்).
அவ்வளவு அழகாக்கியிருக்கிறார். கதையின் மறுபாதி சஸ்பென்ஸ் , த்ரில் வகை. எழுத்தில் உயிர் இல்லை . இரண்டாவது பாதிக்கு சுஜாதாவின் பேனா தேவையில்லை. 
இந்த வார புத்தகம்
சுஜாதாவின் "கரையெல்லாம் செண்பகப்பூ"

No comments: