SHAKTHI......

SHAKTHI......
நினைவுகள்

Monday, February 7, 2011

என்னை மிகவும் பாதித்த (பிடித்த) கவிதை இது. நமக்கும் தெரியாமலே நாமுள் பலரும் இப்படி தான் வாழ்கிறோம்.

ஏனோ என் கணவா?

மெய் வருத்தி செய்த பணி
மெச்சப்படாமல் போகையில்
மென்மையாய் சிரித்தீர்கள்.

மதிப்புமிகு வாடிக்கையாளரின்
வார்த்தை தடிக்கையில்
பணிவாய்ப் பொறுத்தீர்கள்.

தவறிழைத்த  ஊழியனைத் 
திருத்துகையில் கூட தங்கள்
தன்மை மாறவில்லை.

ஆனால்,
என் காதல் குழைத்த சாம்பாரில்
காரம் குறைகையில் மட்டும்
கடிவதேனோ?

நன்றி - ஷண்முக சுந்தர்

No comments: