SHAKTHI......

SHAKTHI......
நினைவுகள்
Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts
Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts

Wednesday, February 9, 2011

எனக்கு பிடித்த ஜெயமோகன் கட்டுரைகள்


ஜெயமோகன் தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர் . சுஜாதாவுக்கு பின் எனக்கு பிடித்த எழுத்தாளரும் இவரே. இவர் கடைகளை விட எனக்கு பிடித்தது இவரது கட்டுரைகளே.
  இங்கு நடக்கும் மத மாற்றம் பற்றி தெரியும் .ஆனால் அதை இவ்வாறு மக்களை மூடர்களாக்கி செய்ய வேண்டாம் என்று தான் வருத்தம் . நம் நாட்டின் கலாசாரத்தையே அழிக்கும் வேலை இது . மத மாற்றம் பற்றியும் நம் மண்ணில் க்றிஸ்துவம் பற்றியும் எனது பார்வையை பிறகு பேசலாம். இப்போது பேச வந்தது ஜெமோ வின் இந்த கட்டுரை பற்றி. மறந்தே போய் விட்டேன் கூற. எழுத்தாளர் ஜெயமோகன் ஜெமோ என்றும் அழைக்கலாம்  என்ன அவருக்கு கேக்கவா போகிறது .

 மிகவும் வருத்தப்பட்டேன் இத படித்து முடித்தவுடன்.




ஆத்திசூடி -ஜெயமோகன்

 எனக்கு பிடித்த கட்டுரை இது. நகைப்புக்கு மட்டுமல்ல. சமுதாயத்தின்(நம்) மீது கோவத்தையும் வருத்தத்தையும் அளிக்கிறது இக்கட்டுரை . ஜெயமோகன் அவர்கள் வலைத்தளத்தில் உள்ளது .

ஆத்திசூடி ஒரு கிறித்தவ நூலே என்று நிறுவும்பொருட்டு பிரபல தோமாகிறித்தவ ஆய்வாளரும் அதன் நிறுவனருமான முனைவர். ஆ.ஆ.தெய்வீகராகம் அவர்கள் எழுதிய ஆய்வுகட்டுரையின் சுருக்கத்தை இங்கே அளிக்கிறோம்.முனைவர். ஆ.ஆ.தெய்வீகராகம் அவர்கள் ஏற்கனவே தொல்காப்பியம், எட்டுத்தொகை பத்துப்பாட்டு, ஐம்பெருங்காப்பியங்கள்,ஐஞ்சிறு காப்பியங்கள், கம்பராமாயணம்,பெரியபுராணம், திருவிளையாடல்புராணம், அரிச்சந்திரபுராணம், நளவெண்பா, கலிங்கத்துப்பரணி, கச்சிக்கலம்பகம்,நாலாயிர திவ்வியபிரபந்தம், தேவாரம், திருவாசகம், திருமந்திரம், சிவஞானபோதம், மீனாட்சியம்மைபிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசாமிபிள்ளைத்தமிழ், கூளப்பநாயக்கன் காதல், விறலிவிடுதூது, பாரதியார் பாடல்கள் ஆகியவை கிறித்தவ இலக்கியங்களே என்பதை ஐயம்திரிபற அமெரிக்காவில் விளக்கி அங்குள்ள துரைத்தனத்தார் அதை ஏற்று கைதட்ட வைத்தவர் என்பதை இங்கே குறிப்பிடவேண்டியுள்ளது. தேம்பாவணியும் இரட்சணிய யாத்ரீகமும்கூட கிறித்தவ நூல்களே என்று அவர் நிரூபித்திருக்கிறார்.
அத்துடன் அன்னார் அவர்களின் புதல்வி முனைவர்.வேதபலா அவர்கள் புதுமைப்பித்தன் கதைகள் க.நாசு.நாவல்கள், கு.ப.ராஜகோபாலன் சிறுகதைகள்,மௌனி விடுகதைகள், ஜெயகாந்தன் கு.அழகிரிசாமி ப.சிங்காரம் படைப்புகள் ஆகியவற்றுடன்; மின்னஞ்சல்களையும் சேர்க்கும்போது எழுபதாயிரம் பக்கங்களுக்கு நீளும் சுந்தரராமசாமி எழுத்துக்கள் அனைத்துமே கிறித்தவ இலக்கியமே என்று ஆணித்தரமாக நிறுவியிருப்பதை சுட்டிக்காட்டவேண்டும். இவ்வாய்வுகள் முற்றிலும் உண்மை என்பதை ஆய்வேடுகளின் கீழே அவர்கள் கைநாட்டு போட்டு அதற்கு கொங்குஞானி , மாவடுதுறை ஆதீனம் போன்றவர்கள் சாட்சிக்கையெழுத்தும் போட்டிருக்கிறார்கள். சாரு நிவேதிதாவின் எழுத்துக்களும் கிறித்தவ எழுத்துக்களே என்று அவர் தொலைபேசியில் ரகசியமாக அச்சுறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.
ஆத்திச்சூடி என்ற பெயர் தவறானது என்று ஆ.ஆ.தெய்வீகராகம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அது கிபி எட்டாம் நூற்றாண்டுவாக்கில் ஆரியபிராமண கொலைவெறியர்களால் திரிக்கப்பட்டது. உண்மையில் அத்திசூடி என்றுதான் இருக்க வேண்டும். அது அத்திப்பழத்தையே குறிக்கிறது. ஆத்திச்சூடி நூலின் முதல் செய்யுளான காப்புச்செய்யுளில் உள்ள  ‘ அத்திசூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தி தொழுவோம் யாமே’ என்ற வரியானது அப்படியே ஒரு கிறித்தவப் பாடல் வடிவில்தான் உள்ளது. [எத்தி எத்தி என்று இரண்டாம் வரி இருக்க வேண்டும்]  அகரவரிசையில் உள்ள ஆத்திச்சூடியின் முதல் எழுத்து ‘ஆ’வாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பதை ஆய்வாளர் கவனிக்கவேண்டும், இதுவே அது அத்திசூடிதான் ஆத்திசூடி அல்ல என்பதற்கான மறுக்க முடியாத ஆதாரம் என்று முனைவர் ஆ.ஆ.தெய்வீகராகம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்
அத்திப்பழம் உண்பதைப்பற்றிய எந்த தகவலும் தமிழிலக்கிய மரபில் இல்லை. அதேசமயம் பைபிளில் அத்திப்பழம் புனித உணவாக பல இடங்களில் சொல்லப்படுகிறது. அத்திப்பழத்தை கையில் வைத்துக்கொண்டு அதைத்தின்றபடியே மலைப்பிரசங்கத்தை ஏசு நிகழ்த்தியிருக்க வாய்ப்புள்ளது.ஆகவே அத்திச்சூடி என்று குறிக்கப்படுபவர் ஏசுபெருமானே. ‘அத்தி பூத்ததுபோல’ என்ற பழமொழி ஏசு உயிர்த்தெழுந்த அற்புதத்தையே குறிப்பிடுகிறது. ‘அத்திப்பழத்தை புட்டுபார்த்ததுபோல’ என்ற பழமொழி ஏசுவின் புனித உடலை பக்தர்கள் பிய்த்துத் தின்னும் குறியீட்டுச்செயல்பாடை குறிப்பிடுகிறது.
அத்திச்சூடி நூலை எழுதியவர் அவ்வையார் என்று சொல்லப்படுகிறது. இவரது உண்மையான பெயர் ஏவாள் என்பதாகும். அதன் திரிபே அவ்வை. இவர் கன்னியாகவே இருந்தார் என்ற வரலாறு உள்ளதை நாம் கவனிக்கலாம். கன்னிமரபு என்பது கிறித்தவம் அன்றி வேறென்ன? ஆகவே ஈவையார் கிபி ஒன்றாம் நூற்றாண்டுவாக்கில் மயிலையில் புனித தோமையர் நிறுவிய கன்னியர்மடத்தின் தலைவியாக இருக்க வாய்ப்புள்ளது. இவர் ‘எட்டேகால் லெட்சணமே எமனேறும் பரியே’ என்று ஒரு செய்யுள் எழுதியிருப்பதிலிருந்து இவருக்கு ‘விரியன்பாம்புக்குட்டிகளே’ என்றெல்லாம் முச்சந்திப்பிரசங்கம் செய்யும் திறனிருப்பதும் தெரியவருகிறது.
இவரது கதையில் இவர் முருகனுக்கு ஞானப்பழம் கொடுத்ததைப்பற்றி பாடியிருப்பதாக தெரிகிறது. முருகன் என்பது ஏசுவே என்று ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுவிட்ட நிலையில் ஞானப்பழம் என்பது ஈவாள் ஆதாமுக்குக் கொடுத்த ஞானப்பழம்தானா என்பதை ஆராயவேண்டியிருக்கிறது. பழனிமலையில் ஏசுவானவர் கோவணத்துடன் ஆண்டியாக நிற்பது ஏன் என்பதும் ஆராயத்தக்கது. அவரது உடைகளை  கல்வாரியில் காவலர்கள் பகிர்ந்து எடுத்துக்கொண்டபின் உள்ள நிலையை அது குறிப்பிடுகிறது என்று ஊகிக்கலாம்.
ஆத்திச்சூடியின் முதல் செய்யுள் ‘அறம்செய விரும்பு’ என்று சொல்கிறது. அறம் செய்கிறார்களோ அதைச்செய்வதற்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் விரும்புவது கிறித்தவர்களின் இயல்பு. அதுவே அவர்களின் மதத்தின் முதல்கட்டளை ஆகும் .அதையே இச்செய்யுள் குறிப்பிடுகிறது என்று முனைவர்.ஆ.ஆ.தெய்வீகராகம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். பிறமதங்களில் அறம் என்பது செய்யவேண்டிய ஒன்றாக இருக்கிறதே ஒழிய விரும்பமட்டும் வேண்டிய ஒன்றாக இல்லை.
‘ஆறுவது சினம்’ என்ற செய்யுளானது ஏசுவின் காயங்களையே குறிப்பிடுகிறது என்பது வெள்ளிடைமலை. [இந்த சொல்லாட்சி கல்வாரி மலையை குறிப்பது என்பதும் வெள்ளிடைமலை] சினத்தால் யூதர்கள் உருவாக்கிய ஏசுவின் புண்கள் தெய்வீக அருளால் ஆறுவதை ஈவையார் குறிப்பிடுகிறார்.
‘இயல்வது கரவேல்’ என்ற மூன்றாவது செய்யுள் வெளிப்படையாகவே கிறித்தவம் சார்ந்தது. தங்களால் இயன்றவரை கரைந்தபடியும் கரைத்தபடியும் இருப்பது ஒவ்வொரு கிறித்தவனுக்கும் ஏசுவானவர் விதித்த ஆணித்தரமான கட்டளை அல்லவா? ‘ஈவது விலக்கேல்’ என்பதும் இதையே குறிப்பிடுகிறது. கிறித்தவர்கள் ஒருபோதும் வெளிநாட்டினர் ஈயும் நன்கொடைகளை விலக்கல் ஆகாது. ‘உடையது விளம்பேல்’ என்பதும் இதன் தொடர்ச்சியே. கிறித்தவ நிறுவனங்களில் உடைய செல்வம் என்ன என்பதை பிதாசுதன்பரிசுத்த ஆவியினர் சேர்ந்துவந்து வினவினாலும் சொல்லக்கூடாது.
அடுத்தசெய்யுளான ‘ஊக்கமது கைவிடேல்’ என்பதை வைத்தே அத்திசூடி கிறித்தவ நூல் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக நிரூபித்துவிடலாம். [உள்ளங்கையில் நெல்லிக்காயை வைத்து ஜெபம் செய்வது அராமிக் பண்பாடு என்பதை விளக்க வேண்டியதில்லை] ஊக்கம் + மது என்று பிரித்தால் வரும் அந்த மது என்ன? கிறித்தவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் மது என்ன? தேவாலயத்தில் ஏசுவின் குருதி என்று கொடுக்கப்படும் அந்த புனிதமது- ஒயின் அல்லவா இங்கே குறிப்பிடப்படுகிறது? இன்றும் ஊக்க மதுவை வழிபாட்டாளர்களுக்கு அளிக்கும் வழக்கம் கத்தோலிக்க தேவாலயங்களில் உள்ளது. அப்போது அந்தக் கோப்பை கைநழுவுவதும் சாதரணம். அப்போது புனிதகுருவானவர் இந்த செய்யுளைத்தான் இப்போதும் சொல்வது வழக்கம்.
‘எண் எழுத்து இகழேல்’ என்ற செய்யுள் குறிப்பிடுவதற்கு ஒரே பொருள்தான் இருக்க முடியும். எண்கள் போடப்பட்ட எழுத்துக்கள் பைபிளில் மட்டுமெ உள்ளன. எந்த இந்திய நூலிலும் அந்த அமைப்பு இல்லை. பழங்காலத்தில் பைபிள் ‘எண்ணெழுத்து’ என்றே அழைக்கப்பட்டிருந்தது என்பதற்கு கல்வெட்டுச் சான்று உள்ளது, கல் ரோமாபுரிக்குக் கொண்டு போகப்பட்டிருக்கிறது. பைபிளை இகழக்கூடாது என்றுதான் புனிதகன்னி ஈவையார் ஆணித்தரமாகச் சொல்கிறார்.
‘ஏற்பது இகழ்ச்சி ‘ என்ற செய்யுளைப் படிக்கும் எவரும் அது கிறித்தவ பண்புநலன் என்பதைப் புரிந்துகொள்ளலாம். ஓர் உண்மைக்கிறித்தவன் ஒருபோதும் பிறர் சொல்லும் எதையுமே ஏற்கலாகாது என்பதே இச்செய்யுளின் பொருளாகும். அதன் மூலம் அவனுக்கு இகழ்ச்சியே ஏற்படும்.
‘ஐயம் இட்டு உண்’ என்ற செய்யுளையும் நாம் இவ்வாறே காண வேண்டும். பிறரில் ஐயங்களை உருவாக்கி அதைவைத்து தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதே இச்செய்யுளின் சாரம். இப்பொருளைக் கொள்ள முடியாத பிராமண வெறியர் ஐயம் என்றால் உணவைப் பகிர்தல் என முற்றிலும் ஆதாரமில்லாத பொருளைக் கொள்வது நகைப்புக்கிடமானது. ‘ஒப்புரவு ஒழுகு’ என்றால் தேவலயங்களில் கிறித்தவர்கள் ஒப்பாக அதாவது சமமாக ஒழுகி வழிபடுவதைக் குறிப்பிடுகிறது. அடுத்தச் செய்யுளில் ‘ஓதுவது ஒழியேல்’ என்பது பைபிளை ஒவ்வொருநாளும் ஓதுக என்றே பொருள்படும்.
‘ஔவியம் பேசேல்’ என்ற செய்யுள் கிறித்தவர்கள் ஒருபோதும் பிற கருத்துக்களை பேசக்கூடாது என்று பொருள்படும். அராமிக் மொழியிலோ அல்லது வேறு ஏதாவது ஒரு மொழியிலோ ஔவியம் என்றால் பழிக்கப்பட்டது என்று பொருள் என்பதை இங்கே திட்டவட்டமாகக் குறிப்பிட வேண்டியுள்ளது.
இவ்வளவு தூரம் வந்தபின் கடைசிச் செய்யுள்ளான ‘அ·கஞ் சுருக்கேல்’ என்பதும் கிறித்தவ பொருள் உடையதே என்பதை சொல்லவேண்டியதில்லை
தமிழர்களே உலகுக்கு மெய்ஞானத்தை கற்பித்தவர்கள். இந்தியாவெங்கும் உள்ள எல்லா மொழிகளும் தமிழில் இருந்து வந்தவையே. உதாரணமாக பார்+அது என்று தமிழர்கள் சொன்னதனாலேயே பாரதம் என்ற பெயர் வந்தது. இந்தியாவில் இருந்துதான் மெய்ஞானம் சீனா முதலியநாடுகளுக்குச் சென்றது. ‘தமிழ்’ என்ற சொல்லை சீனர்கள் தங்களல் இயன்றவரை சொல்ல முயற்சித்ததன் விளைவே ‘தாவோ’ ஆகும். இந்த கோணத்தில் ஆராயும் எவரும் மாவோ என்ற சொல் மாமன் என்ற சொல்லின் திரிபு என்று கண்டுகொள்ள முடியும்.ஆகவே தமிழே உலக ஞானத்துக்கு அடிப்படை. தமிழ் ஞானத்துக்கு தாமையர் அடிப்படை.
இந்த உணர்வை அடைந்து ஒன்றே குலம் [ஏசு] ஒருவனே தேவன் என்ற தமிழ்கோட்பாட்டை ஏற்று  புனித தாமையர்மதத்தை மேலும் செம்மைப்படுத்தி அதைத்தழுவி உய்வோமாக. வாழிநலம்சூழ! ஓம்! அதாவது ஆமேன் !

Friday, January 21, 2011

secularism

அண்மையில் நான் ரசித்த பதிவு .
இதை பற்றி வெகு காலமாகவே நண்பர்களுண்டன் விவாதித்து ( சண்டையிட்டு ) கொண்டிருந்தாலும் நான் ஏதும் எழுதவில்லை.
இந்த பதிவு   தங்களை அதிமேதாவிதனமாக எண்ணி கொண்டிருக்கும் முட்டாள்களுக்கு.


http://nizhalkal.blogspot.com/2010/05/blog-post.html



எழுதியது ஹரன் பிரசன்னா . நன் ரசித்த அவரது முதல் பதிவு


Thursday, March 11, 2010

Tax structure in India

1) Qus. : What are you doing?
Ans. : Business.
Tax : PAY PROFESSIONAL TAX!

2) Qus. : What are you doing in Business?
Ans. : Selling the Goods.
Tax : PAY SALES TAX!!

3) Qus. : From where are you getting Goods?
Ans. : From other State/Abroad
Tax : PAY CENTRAL SALES TAX, CUSTOM DUTY & OCTROI!

4) Qus. : What are you getting in Selling Goods?
Ans. : Profit.
Tax : PAY INCOME TAX!

5) Qus. : How do you distribute profit ?
Ans : By way of dividend
Tax : Pay dividend distribution Tax

6) Qus. : Where you Manufacturing the Goods?
Ans. : Factory.
Tax : PAY EXCISE DUTY!

7) Qus. : Do you have Office / Warehouse/ Factory?
Ans. : Yes
Tax : PAY MUNICIPAL & FIRE TAX!

8) Qus. : Do you have Staff?
Ans. : Yes
Tax : PAY STAFF PROFESSIONAL TAX!

9) Qus. : Doing business in Millions?
Ans. : Yes
Tax : PAY TURNOVER TAX!
Ans : No
Tax : Then pay Minimum Alternate Tax

10) Qus. : Are you taking out over 25,000 Cash from Bank?
Ans. : Yes, for Salary.
Tax : PAY CASH HANDLING TAX!

11) Qus.: Where are you taking your client for Lunch & Dinner?
Ans. : Hotel
Tax : PAY FOOD & ENTERTAINMENT TAX!

12) Qus.: Are you going Out of Station for Business?
Ans. : Yes
Tax : PAY FRINGE BENEFIT TAX!

13) Qus.: Have you taken or given any Service/s?
Ans. : Yes
Tax : PAY SERVICE TAX!

14) Qus.: How come you got such a Big Amount?
Ans. : Gift on birthday.
Tax : PAY GIFT TAX!

15) Qus.: Do you have any Wealth?
Ans. : Yes
Tax : PAY WEALTH TAX!

16) Qus.: To reduce Tension, for entertainment, where are you going?
Ans. : Cinema or Resort.
Tax : PAY ENTERTAINMENT TAX!

17) Qus.: Have you purchased House?
Ans. : Yes
Tax : PAY STAMP DUTY & REGISTRATION FEE !

18) Qus.: How you Travel?
Ans. : Bus
Tax : PAY SURCHARGE!

19) Qus.: Any Additional Tax?
Ans. : Yes
Tax : PAY EDUCATIONAL, ADDITIONAL EDUCATIONAL & SURCHARGE ON ALL THE CENTRAL GOVT.'s TAX !!!

20) Qus.: Delayed any time Paying Any Tax?
Ans. : Yes
Tax : PAY INTEREST & PENALTY!

21) INDIAN :: can i die now??
Ans :: wait we are about to launch the funeral tax!!!

Wednesday, March 10, 2010

கொங்கு வட்டாரச் சொற்களின் அழகு

போன வாரம் மலையேற்றத்திற்கு (Trekking) நண்பர்களுடன் பொள்ளாச்சி கிட்ட இருக்க டப் ஸ்லிப் போனேன். சேத்துமடைநு ஒரு ஊர்ல தங்கி இருந்தப்ப எங்கும் சங்கீதம் போல இனிமையான கொங்கு மொழி. அவ்வளவு மரியாதையை வேற எந்த மாவடதிளையும் பார்க்க முடியாது. நண்பர்களின் பல மணி நேர கிண்டல் கேலிக்குப் பின்னும் இன்னும் காதில் ரீங்கரமிட்டுக் கொண்டிரிக்கிறது . வேலைக்காக கோவையை விட்டு பிரிந்து சென்னை தங்கி விட்ட போதிலும் துளியும் குறையவில்லை நம் மண்ணின் பாசம்.
சமீபத்தில் நான் ரசித்த வலைப்பதிவு.


கொங்கு நாட்டு வட்டார வழக்கின் சொற்களை அழகாய் கூறியிருக்கிறார் முகம் தெரியாத பங்காளி. ரொம்ப நன்றிங்க்னா .....
கொங்கு வட்டாரச் சொற்கள்
http://konguvaasal.blogspot.com/2007/07/blog-post_25.html

Monday, March 8, 2010

கொங்கு நாடு - 1

கொங்கு நாட்டை பத்தி  எங்கள் எல்லோருக்கும் ரொம்ப பெருமை . கொங்குச்சிங்கங்கள் என்று மார் தட்டி கொள்வோம் அடிக்கடி. கோவையில் ஒருமுறை தங்கியவர்கள் என்றுமே அதை சுகமாக நினைப்பார்கள். இதையெல்லாம் ஏன் இப்போது சொல்கிறேன்??
யாழினிது குழலினிது என்பர் கொங்கு மொழி கேளாதோர் . சங்கீதம் போல் இனிமையாக  கொஞ்சும் மொழி எமது. மரியாதைக்கு பெயர் போனது எமது கொங்கு மண்டலம். யாரேனும் திட்டினால் கூட அது மரியாதையாகத்  தான் இருக்கும் . சமீபத்தில் ஒரு வலைப்பதிவில் ஒரு பதிவு அழகிய கொங்கு தமிழில் இருந்தது . மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பியதால் இதோ கீழே....
http://varungalamuthalvar.blogspot.com/2008/12/blog-post_04.ஹ்த்ம்ல்
கோவையைப் பற்றி கவிஞர் கண்ணதாசன் கூறியது


கோயம்புத்தூர் - கவிஞர்  கண்ணதாசன்


கன்னியரின் இதழழகைக் கோவை யென்பார்!
கனிமழலை முழுவடிவைக் கோவை யென்பார்!
தேன்தமிழில் திருக்கோவை நூலொன் றுண்டு
திறமான கவிதொகுத்த கோவை யுண்டு
இந்நகரைக் “கோவை” என ஏனழைத்தார்?
எழில்கோயம் புத்தூர் என்றேன் படைத்தார்!
என்கருத்தை யான்சொல்வேன்! தமிழறிந்தோர்
இதுதவறென் றுரைத்தாலும் தவறே யாக!


வஞ்சியர்கள் விளையாடும் வஞ்சி நாட்டின்
மன்னருக்கு மக்களென இருவர் வந்தார்
செஞ்சரத்து வில்லவனாய் வடபாற் சென்ற
செங்குட்டுவன் ஒருவன்! தமிழெடுத்து
அஞ்சிலம்பை யாத்தணித்த இளங்கோ அண்ணல்
அடுத்தொருவன்! இவ்விருவர் குறிப்பும் பார்த்து
பிஞ்சுமகன் அரசாவான் என்றுரைத்தான்
பேதையொரு வேதாந்தி! அதனைக் கேட்டு
முன்னவனே நாடாள வேண்டுமென்று
முடிமாற்றி உடைமாற்றி இளங்கோ அண்ணல்
தன்னாட்டின் எல்லையிலோர் குடிலமைத்தான்!
தனியாகச் சாத்தனுடன் தங்கிவிட்டான்,
அந்நாளில் இளங்கோவன் அமைத்த புத்தூர்
அங்கோவன் புத்தூராய்ப் பேரெடுத்து
இந்நாளில் கோயம் புத்தூ ராயிற்று!
இயல்பான உருமாற்றம் சரிதச் சான்று!


நீலமலைச் சாரலிலே நிலம் விரித்து
நெளிந்துவரும் தென்றலினை வளையவிட்டுப்
பால்போன்ற இதயத்தைப் பிள்ளை யாக்கிப்
பண்பினையும் அன்பினையும் துணைவர் ஆக்கி
வாழுங்கள் எனவிட்டாள் தமிழ் மூதாட்டி!
வாழ்கின்றார் கோவையிலே நல்ல மக்கள்!
சூழ்கின்ற பண்பெல்லாம் கோவையில்தான்!
சுவையெல்லாம் பண்பெல்லாம் கோவையில்தான்!
ஏனுங்க! என்னவுங்க! ஆமா முங்க!
இருக்குங்க! சரியிங்க! பாக்க வாங்க!
மானுங்க! வேணுங்களா! வாங்கிக் கோங்க!
மலைப் பழமும் இருக்குங்க! எடுத்துக்கோங்க!
தேனுங்க! கையெடுங்க! சாப்பிடுங்க!
திருப்பூரு நெய்யுங்க! சுத்த முங்க!
ஏனுங்க! எழுந்தீங்க! உக்காருங்க!
ஏ, பையா! பாயசம் எடுத்துப் போடு!
அப்பப்பா! கோவையிலே விருந்து வந்தால்
ஆறுநாள் பசிவேண்டும்! வயிறும் வேண்டும்!
தப்பப்பா! கோவைக்கு வரக்கூடாது!
சாப்பாட்டி னாலேயே சாக டிப்பார்!
ஒப்பப்பா இவருக்கு வள்ளல் ஏழ்வர்!
உயர்வப்பா இவர்நெஞ்சம் ஊற்றின் தேக்கம்!
கொடுத்தவரை பாடுவ தெம்குல வழக்கம்
கொடைக்கெனவே படையெடுத்தோர் புலவர் பல்லோர்
இனித்தசுவைப் பழங்கொடுத்த வள்ளல் பற்றி
இயன்றவரை பாடிவிட்டாள் ஔவைத்தேவி
தனித்தனியே கனிவைத்துத் தேனும் வைத்துத்
தந்தானைப் புகழ்ந்தானே கம்பன் அன்றும்
கொடுத்தவனைப் புகழ்வதுதான் புலவன் பாட்டு
குறையெதற்கு? நானுமதைச் செய்து விட்டேன்.